அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

முத்தம்

நாம் காதலித்தபோது
பயத்தில்
பதட்டத்தில்
நீ கொடுத்த
"பாதி" முத்தம்.
அடுத்தடுத்த
இருட்டு சந்திப்புகளில்
நீ கொடுத்த
"திருட்டு "முத்தம்.
கை பிடித்தபிறகு
அலுவலகம்
கிளம்புகையில்
அவசரகதியில்
நீ கொடுத்த
"ஆசை" முத்தம்.
விடுமுறைதினங்களில்
பதுங்கிப்பின்னால் வந்து
பகலில் நீ கொடுத்த
சமையலறை
"ஜாலி" முத்தம்.
பள்ளியறை இரவுகளில்
காமம் விழித்த தருணங்களில்
கட்டிலில் நீ கொடுத்த
"கெட்டி" முத்தம்.
ஆசையாய்
வளர்த்த
சுப்பிரமணி
இறந்தபோது
நீ கொடுத்த
"ஆறுதல்" முத்தம்.
கடும்காய்ச்சலில்
அவதிப்பட்டபோது
அன்பாய்
நீ கொடுத்த
"எனர்ஜி" முத்தம்.
மிகவும் நேசித்த
பாட்டி இறந்தபோது
பரிவுடன் நீ கொடுத்த
"பாச"முத்தம்.
இண்டர்வியூ செல்ல
பயந்த போது நெளிவு சுளிவு
சொல்லிதந்து ஊக்கப்படுத்தி
நீ கொடுத்த
"உற்சாக "முத்தம்.
ஸ் கூட்டி ஓட்டக்கற்றுக்கொள்ள
முட்டுச்சுவற்றி்ல்
மோதிவிழுந்து
முட்டிதேய
அழுது
எழுந்தபோது
அரவணைத்து
நீ கொடுத்த
"அன்பு"முத்தம்.

இருவருக்கும் விவாதம்முற்றி
வாக்குவாதம் அதிகரித்து
வார்த்தைகளை
ஒதுக்கிவிட்டு
மெளனத்தோடு போராடிய
பொழுதுகளில்
பேசமாட்டோமா என
ஏங்கியிருக்கையில்
தூங்கா
நீண்ட இரவின்
நீட்சியில்
அதிகாலையில்
அரைத்தூக்கத்தில்
இருந்தபோது
என் உச்சி
நெற்றியில்
நீ கொடுத்த
"உயிர்" முத்தம்
முத்தங்களின்
உச்சம்.



"மாப்பிள்ளை வீட்டுக்காரங்க
வந்துகிட்டுஇருக்காங்க ரெடியாயிடு"
குரல் கேட்டு
ஆயத்தமானாள்
முகம் தெரியாத
கணவனுடன்
முத்த கனவுகளில்
மிதந்த
முதி்ர்கன்னி.

3 கருத்துகள்:

jeeva MBA சொன்னது…

Good mr.saravanan

jeeva MBA சொன்னது…

i am jeeva from coimbatore, all the best to write more..

கோவை நேரம் சொன்னது…

அதுக்கப்புறம் எழுதுவதே இல்லையா ..?