அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

கவிதை

அதிகாலையில்
பூமிக்கு ஒத்தடம்,
என்னவள்
"வாக்கிங்" செல்கிறாள் .













காற்றே மெதுவாய் வீசு!
மறைந்துவிடப்போகிறது
மணலில்
அவளின் பாதச்சுவடுகள்!






கோவில் சென்றும்
கடவுளை வழிபடமுடியவில்லை!
மனைவியை
பாதுகாத்து
பத்திரமாய் கூட்டிச்செல்வதிலேயே மனம் இருந்ததால் ...










அவள்
அழுத்தமாகத்தான் முத்தமிட்டாள்
ஆனாலும்
இனிக்கவில்லை.
லிப்ஸ்டிக் பூசிய இதழ்கள்!








 எத்தனைமுறை
விசிலடித்தும்
கோபமே வரவில்லை
நம் வீட்டு பெண்களுக்கு !
"குக்கரின்மேல் "




அடிக்கடி ஏமாந்தேன்
நீ சிரிப்பதாய் நம்பி ..
கண்டக்ட்டர் பையை
குலுக்கையில் ...



கிள்ளிய பருக்கள்
சொல்லியது
உன்மெல்
நான் வைத்த காதலை!



இத்தனை மழை பெய்து
என்ன பயன் ?
உன்னோடு
ஒரு குடையில் நடக்காதபோது!

கருத்துகள் இல்லை: