அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

போலி டிக்ஸ் பேட்டி



சென்ற ஆட்சியாளர்கள்  மீது நிறைய கைது நடக்குதே பழி வாங்கும் நடவடிக்கையா?

நிச்சயமா இல்லை மைனாரிட்டி திமுக அரசு பண்ண மெஜாரிட்டி தவறுகள் ஊழல், நில அபகரிப்பு, ரவுடியிசம். ‌ அதை சட்டப்படிதான் என்னாலான  என் ‌தலைமையிலான எனது அரசு நடவடிக்கை எடுக்கிறது

பால் விலை பஸ் கட்டணம்  எல்லாம் உயர்த்திட்டீங்களே-??

போன ஆட்சில தீயசக்தியான திமுகவை ஆட்சில உட்கார வைச்சதுக்கு
தமிழக மக்களுக்கு நான் தர்ற சிறு தண்டனை. இப்பதான் எனக்கு நிம்மதியாயிருக்கு ஆத்திரம் அடங்கியிருக்கு

அவங்க கட்டின எல்லா பில்டிங்கையும் ஆஸ்பிடலா மாத்தியிருக்கீங்களே??

அவர் தனக்கப்புறம் தன் வீட்ட ஆஸ்பிடலா எழுதி தர்றதா சொன்னார் நான் அவங்க ஆசையத்தான் நிறைவேத்தியிருக்கேன் .அதான்  அவங்க கட்டின பில்டிங் எல்லாத்தையுமே ஆஸ்பிடலா மாத்தியிருக்கேன்


மேம்பாலத்த என்ன ‌பண்ணப்போறீங்க மேடம்-??

மேம்பாலம் மேல இன்‌னொரு மேம்பாலம் வரும் அப்ப கீழ் பாலம்  விபத்து அவசர சிகிச்சைஆஸ்பிடலா செயல்படும்


149 தடவ ஓபி அடிச்சிட்டு ஒருவழியா பெங்களுர் கோர்ட் போனீங்க ஒரு ‌வேளை தீர்ப்பு பாதகமா வந்தா?
‌‌
அதான் ஓபி இருக்காரே


தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் என்னவல்லாம் செய்ய இருக்கீங்க?

அதை கொடநாட்டுல போயிதான் யோசிக்கனும்.


1 கருத்து:

கோவை நேரம் சொன்னது…

பார்த்துங்க ..அரசியல் வாதிகள் வீடு தேடி வந்துட போறாங்க....நகைச்சுவையான பதிவு